"ஓம் கலிதோஷ நிவ்ருத்யேக காரணாய நமோ நம : "
உடம்பு நமக்கு சிறை. நம் உண்மையான வீடு ஆனந்தமான மோட்சம்தான். நாம் சிறையை விட்டு சொந்த இடத்தில் இருக்க வேண்டும். விடுதலையாகி இறைவனுக்குள் போய் இருக்கிற நம் உண்மையான வீட்டைஅடைய முயலவேண்டும். அந்த வீடுதான் எல்லையற்ற இன்பம், உலகில் காலம், தேசம், பொருள் இந்த மூன்றிலும் ந்றைந்து இருக்கும் பேரின்பம்.
பிறரது குறைகளை வெளிப்படுத்தக் கூடாது. அவர்களிடம் உள்ள அம்சங்களையே வெளிப்படுத்த வேண்டும். தேய்ந்து போன சந்திரகலைக்கும் கூட குளுமையும் பிரகாசமும் இருப்பதால், அதைப் பரமசிவன் தம் தலையில் தரித்து உலகமெல்லாம் பார்த்து புகழும்படி செய்கிறார்.