Saturday, January 8, 2011

லோக க்ஷேமார்த்தமான சப்தங்களின் மூலத்தைக் கொண்டே ஏற்பட்ட பாஷை உண்டென்றால் அது வேத பாஷையின் ஸந்தந்தான்.



ஓம்பக்தலோஜன ராஜீவ பாஸ்கராய நமோ நம:


நம்முடைய ஹிந்து மதம் ஒன்றுதான் "இது ஒன்றே மோக்ஷ மார்க்கம்" என்று சொல்லாமலிருக்கிறது. நம்முடைய வைதீக மதம்தான், பிறரைத் தன் மதத்துக்கு மாற்றுவது என்பது கிடையாது.  ஏனென்றால், "ஒரே பரமாத்மாவை அடைவதற்கான பல மார்கங்களே பல மதங்களும்" என்று நம் முன்னோர்கள் நங்கு உணர்ந்திருந்தனர்.


வேதம் ஸம்ஸ்கிருத பாஷையில் இருக்கிறது என்று தானே நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.  அதுவே தப்பு;  வேத பாஷைக்கு ஸம்ஸ்கிருதம் என்று பேர் இல்லை.  அதற்குப் பேர் ஸந்தஸ் என்பதுதான்.  சந்தஸ்
என்றால் சந்தம் [Metre]   மட்டுமில்லை.  முழுக்கவும் லோக க்ஷேமார்த்தமான சப்தங்களின் மூலத்தைக் கொண்டே ஏற்பட்ட பாஷை உண்டென்றால் அது வேத பாஷையின் ஸந்தந்தான்.  

நித்தார் காரியங்கள் செய்வதில் சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம்; சிரத்தையோடு செய்வது சிரார்த்தம்.

"ஓம் தத்தத்விபாக சத்போத தாயகாய நமோ நம:"


பிற பெண்களை தாய்மார்களாக மதிக்க வேண்டும்.  பிற உயிரைத் தன்னுயிர்போல் மதிக்க வேண்டும். உயிர் போவதாக இருந்தாலும் உண்மையே பேச வேண்டும்.  சமூகச் சச்சரவுகள், வகுப்புச் சச்சரவுகள் செய்வதை அறவே ஒழிக்க வேண்டும்.  எல்லோரிடமும் சம அன்பு கொண்டு ஒழுக வேண்டும்.  எல்லோரிடமும் வாழவேண்டுமென ஒவ்வொருவனும் நினைக்க வேண்டும்.  ஒவ்வொருவனும் தனது அறிவு வளர்ச்சிக்கும் ஆத்ம முன்னேற்றத்திற்கும் பாடுபட வேண்டும்.  வெற்றிக்கெல்லாம் புத்தியும்,  சக்தியும் தருமாறு கடவுளைப் பிரார்த்திக்க வேண்டும்.
Related Posts with Thumbnails