ஓம் சசிஷ்ய கண யாத்ரா விதாயகாய நமோ நம:
பெரிதாக வாய்ப்பந்தல் போட்டு விட்டு வாழ்க்கையில் வேறு விதமாக இருந்தானானால், அவன் எத்த்னை அழகாக சத்தியத்தை எடுத்துச் சொன்னாலும் அதற்கு மற்றவர்களை தூண்டி விடும் சக்தி இருக்காததால், அது சத்தியத்தோடு சேரவே சேராது. உயிரில்லாத வெற்றுப் பேச்சு சத்தியம் சத்தியமேயில்லை.
தானே செயல் புரிந்தவனாக கொண்டாடிக் கொள்வது பாரம் வேறு எதுவும் கிடையாது. இப்பெருமையினால் நாமே நம் கழுத்தில் கல்லைக் கட்டிக் கொள்கிறோம் என்பது உண்மை.
கட்டுப்பாடு இருந்தால்தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும். கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் வேண்டும். அகங்காரம் போனால்தான் அடக்கம் வரும்.
No comments:
Post a Comment
You may leave your comments here