நிரந்தர ஒற்றுமைக்கு வழி சேர்ந்து தொண்டு காட்டுவதேயாம்.
" தர்மார்த்த காமமோக்ஷ ப்ரதாயகாய நமோ நம: "
வயிறு நிரம்பச் சாப்பாடு, மானத்தைக் காபாற்றிக் கொள்ளத் துணி, இருப்பதற்கு ஒரு வீடு - இம்மாதிரியான அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாக வேண்டும். இதற்கு மேல், ஆசைக்கு மேல் ஆசை, தேவைக்கு மேல் தேவை என்று பறக்க வேண்டியதில்லை. அப்படி மற்றவர்களை பறக்காமல் இருக்கச் செய்வதற்காக நாமும் எளிமையாக வாழ வேண்டும்.
நிரந்தர ஒற்றுமைக்கு வழி, சேர்ந்து உண்டு காட்டுவதல்ல, சேர்ந்து தொண்டு காட்டுவதேயாம். நாம் பல சமயங்களில் சொன்னதுபோல ஜாதி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் எல்லா மக்களும் சேர்ந்து எல்லா மக்களுக்குமான தொண்டுகளைச் செய்வதால் தான், ஒற்றுமை வளரும்.
No comments:
Post a Comment
You may leave your comments here