Saturday, September 5, 2009

சொந்த ஆசை, நுவேஷம் இல்லாதபோது, எந்த காரியம் செய்வதிலும் வெறுப்பு இராது.

                     ஓம் ஆசார்யபாத அதிஷ்டான அபிஷிக்தாய நமோ நம:

வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூகசீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படாது. எல்லோரும் ஈசனின் குழந்தைகள் என்ற பக்தியினால்தான் மக்களை ஒன்று சேர்க்க முடியும்.


நாம் செய்யும் பாபத்திற்கு உடம்பு தண்டனை; பாபத்திற்கு மூலம் கெட்டகாரியம்; கெட்டகாரியத்திற்கு மூலம் ஆசை; ஆகையால், நம் கஷ்டம் அனைத்திற்கும் மூல காரணமாகிய ஆசையைப் போக்கினால் தான் நிரந்தரமான துக்க நிவர்த்தி உண்டாகும்.


ஜாதியில் உயர்வு, தாழ்வு நிச்சியமாக இல்லை. மகான்கள் அப்பர், நம்மாழ்வார், சேக்கிழார், நந்தனார், கண்ணப்பர் மாதிரியானவர்கள் எந்த ஜாதியிலும் தான் தோன்றியிருக்கிறார்கள்.

No comments:

Post a Comment

You may leave your comments here

Related Posts with Thumbnails