ஓம் ஆசார்யபாத அதிஷ்டான அபிஷிக்தாய நமோ நம:
வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூகசீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படாது. எல்லோரும் ஈசனின் குழந்தைகள் என்ற பக்தியினால்தான் மக்களை ஒன்று சேர்க்க முடியும்.
நாம் செய்யும் பாபத்திற்கு உடம்பு தண்டனை; பாபத்திற்கு மூலம் கெட்டகாரியம்; கெட்டகாரியத்திற்கு மூலம் ஆசை; ஆகையால், நம் கஷ்டம் அனைத்திற்கும் மூல காரணமாகிய ஆசையைப் போக்கினால் தான் நிரந்தரமான துக்க நிவர்த்தி உண்டாகும்.
ஜாதியில் உயர்வு, தாழ்வு நிச்சியமாக இல்லை. மகான்கள் அப்பர், நம்மாழ்வார், சேக்கிழார், நந்தனார், கண்ணப்பர் மாதிரியானவர்கள் எந்த ஜாதியிலும் தான் தோன்றியிருக்கிறார்கள்.
மஹா வைத்யநாதம்
10 years ago





No comments:
Post a Comment
You may leave your comments here