Monday, September 21, 2009

தரமான வாழ்க்கை மனநிறைவோடு இருப்பது தான்


நிர்ணித்ர தேஜோவிஜித த்ராத்யாதயநமோ நம: ஓம்

குறைகள் உள்ளவரிடம் அதை எடுத்துக் காட்ட வேண்டுமானால், நமக்கு பூரண தகுதி இருக்க வேண்டும். தம்மிடமே ஏராளமான குறைகளை வைத்துக் கொண்டு இன்னொருத்தருக்கு உபதேசம் செய்தால் அது பலனளிக்காது.

காமமும் ஒரு நெருப்புத் தான். அது தீயாக எரிகிறது. அதற்குப் பிரியமான பொருளைக் கொடுப்பதால் பசி அடங்காமல் அதிகமாகிக் கொண்டே போகிறது. அது நம் மனதையே கறுப்பாகிவிடுகிறது.

குற்றம் இழைத்தபின் ஒருவரைத் தண்டிப்பதும், ஒருவர் சுபாவமான தர்ம உணர்ச்சி இல்லாமல் தண்டனைக்கு பயந்தே குற்றம் செய்யாமல் இருக்கச் செய்வதும், இரண்டாம் பட்சம்தான். குற்றம் செய்கிற எணணமே தோன்றாமல் செய்வதுதான் உயர்ந்தது.

No comments:

Post a Comment

You may leave your comments here

Related Posts with Thumbnails