வெளிப் பொருள்களிலிருந்து நமக்கு ஆனந்தம் வரவில்லை. நம்மிடமிருந்தே தான் ஆனந்தம் பிறக்கிறது
ஓம் சங்கரபதாம்போஜ சிந்தனாய நமோ நம:
வெளிப்பொருள் ஏதோ கிடைக்காததால் நமக்கு குறை வந்து விட்டதாக துக்கப்படுவது சுத்த தப்பு. நமக்கு குறையே இல்லை. நமக்குள் நாமே பூரண பொருள். நமக்கு அந்நியமாக வெளி என்றே ஒன்று இல்லை. வெளியிலே இருக்கிற அத்தனை ஆனந்தமும் நமகுள்ளேயே அடக்கம்.
கோபத்திலே பல பாபங்களைச் செய்கிறோம். கோபத்திற்கு காரணம் ஆசை, காமம். காமத்தை, ஆசையை ஒழிக்க வேண்டும். பற்றை நிறைய வளர்த்துக் கொண்டு காரியம் செய்யாமல் இருப்பது என்பது முடியாது. பற்றை ஒழித்துவிட்டால், பாபம் செய்யாமல் இருக்கலாம்.
No comments:
Post a Comment
You may leave your comments here