இறைவனும் குருவும் வேறில்லை
"ஸ்ரீசோட சாந்த கமல ஸ்வஸ்திதாய நமோ நம: "
இறைவனும் குருவும் வேறில்லை. இறைவனே தன்னைக் காட்டிக் கொடுக்கிற ரூபத்தில் இருக்கிறான். இப்படி நம்பி ஒருவரை குருவாக வரித்துவிட்டால், பலன் நிச்சயம்.
எழுத்து, அதைப்படித்து மூளைக்குப் புரிகிற அர்த்தம் -- இவைகளோடு வேதம் முடிந்துபோய் விடுவதில்லை. பெரிய அனுபவங்களைத் தரும் சக்தி அதனுடைய எழுத்து வடிவதற்குள்ளேயே இருக்கிறது. அதை உள்ளே வத்துக் கொண்டிருக்கும் "மறை" யாக அது இருக்கிறது.
எல்லா சமயங்களும் கடவுள் ஒருவரே என்று சொல்கின்றன; ஒருவரேயான அந்தக் கடவுள் எந்த சமயத்தின் மூலம் வழிப்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் செய்வர். எனவே எவருமே தங்கள் பிறந்த மதத்தை விட்டு இன்னொரு மதத்தை தழுவ வேண்டியதில்லை.
No comments:
Post a Comment
You may leave your comments here