ஆசையும், துவேஷமும் போய்விட்டால், எந்த காரியத்தையும் அன்போடு செய்து கொண்டு ஆனந்தமாக இருக்க முடியும்
"சாஸ்த்ரா புராணாதி விசாராய நமோ நம: ஓம்
தற்போது பொருளாதாரத் தேவைகளை அதிகமாகிக் கொண்டே போவதைத் தான் "வாழ்க்கைத் தரம்" என்கிறார்கள். இதைவிட்டு மனதினால் உயர்ந்து உண்மையாகவே வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதைத்தான் பெரிதாக எண்ண வேண்டும்.
மனநிறைவு வெளிப்பொருட்களால் ஒரு நாளும் கிடைக்காது. இவைகளைச் சேர்க்க மேலும் மேலும் சௌகரியத்திற்கு ஆசைப்பட்டுக்கொண்டு புதுப்புதுப் பொருட்களைக் கண்டு பிடித்து வாங்கிக் கொண்டே தான் இருப்போம். நாம் இருப்பதைப் பார்த்து வசதியில்லாதவர்களூக்கும் இதே ஆசை வெறியை உண்டாக்கி விடுகிறோம். இதனால் போட்டி, சண்டை எல்லாம் உண்டாகின்றன.
No comments:
Post a Comment
You may leave your comments here