தாயார், தகப்பனார்கள் இந்த உலகத்தில் பிறப்பைக் கொடுத்து இந்த உலகத்தில் நன்றாக வாழப் பண்ணி இந்த உலகத்திற்கான சொத்தைக் கொடுப்பார்கள். ஆனால் இவையெல்லாம் நிலையில்லாதவை. நிலையான சொத்தை - என்றும் அழிவில்லாத பிரம்மானுபவத்தைத் தருபவர் "குரு" தான்.
தனக்குப் பிடித்த ஒருவரைத் தானே தேர்ந்தெடித்து வரிப்பதுதான் "வரணம்" என்பது. சரியான குருவைத் தேர்ந்தெடுத்து அவரிடம் போய்ச் சேருவது "குருவர்ணம்". நல்ல சீடனைத்தேடி எடுப்பது "சிஷ்ய வரணம்".
மஹா வைத்யநாதம்
9 years ago
No comments:
Post a Comment
You may leave your comments here