தாயார், தகப்பனார்கள் இந்த உலகத்தில் பிறப்பைக் கொடுத்து இந்த உலகத்தில் நன்றாக வாழப் பண்ணி இந்த உலகத்திற்கான சொத்தைக் கொடுப்பார்கள். ஆனால் இவையெல்லாம் நிலையில்லாதவை. நிலையான சொத்தை - என்றும் அழிவில்லாத பிரம்மானுபவத்தைத் தருபவர் "குரு" தான்.
தனக்குப் பிடித்த ஒருவரைத் தானே தேர்ந்தெடித்து வரிப்பதுதான் "வரணம்" என்பது. சரியான குருவைத் தேர்ந்தெடுத்து அவரிடம் போய்ச் சேருவது "குருவர்ணம்". நல்ல சீடனைத்தேடி எடுப்பது "சிஷ்ய வரணம்".
மஹா வைத்யநாதம்
11 years ago





No comments:
Post a Comment
You may leave your comments here