அன்புக்கு மட்டும்தான் அடைக்கும் தாழ் இல்லை. அறிவுக்கும் அப்படியே என்பதே பாரத்யர்கள் கடைப்பிடித்த உள்ளத நெறி. நமக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று சதா அரிப்பு இருக்கிறவரையில் நாம் தரித்திரர்கள்.
ஓம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸ்ரீ சரஸ்வத்யை நமோ நம:
தன் உயிரே போவதாக இருந்தாலும் அறிவை எங்கிருந்தாலும் பெறப்பாடுபடுவது. அதே மாதிரி, தன் உயிரையே எடுக்கக்கூடியவனாக இருந்தாலும், தனக்குத் தெரிந்த அறிவை அவனுக்கும் கொடுப்பது - இதுதான் இந்தியப் பண்பாடு.
நம் வரையறைகளை [limitations ] புரிந்து கொண்டு நம்முடைய அறிவுரை [advice] எங்கே எடுபடுமோ அங்கே மட்டும் நல்லது, பொல்லாததுகளைச் சொல்வதோடு நிறுத்திக் கொள்வது தான் நம்மாதிரி சாதாரண் நிலையினருக்கு உகந்ததாக இருக்கும்.
No comments:
Post a Comment
You may leave your comments here