துக்கம் நம் உடன்பிறப்பு
ஓம் ஆஸ்ரிதாச்ரயனீயத்வ ப்ரபகாய நமோ நம:
கோர்ட்டுகள் அதிகமாகின்றன என்றால் குற்றங்கள் அதிகமாகின்றன என்பதே அர்த்தம். இதற்குப் பதில், கோயில்கள் அதிகமானால் எங்கும் சாந்தம் பரவும்.
வாழ்க்கைத் தரம் உயர்வது என்று சொல்லிக் கொண்டு வாழ்க்கைத் தேவைகளை அதிகப்படுத்திக் கொண்டு போவதால், வீண் ஆசை தான் அதிகமாகும். எத்தனை சம்பாதித்தாலும் போதாமல் நாட்டில் தரித்திரம்தான் மிஞ்சும்.
தேவை என்று ஒன்றை ஏற்படுத்திக் கொண்டு விட்டோமானால், அப்புறம் அதைப் புரிந்து கொள்ளும் ஓயாத முயற்சி ஏற்படத்தான் செய்கிறது. இது திருப்திக்கும் சாந்திக்கும் கேடுதான். போதும் என்ற மனமே பொன்னான திருப்தியைத் தருவது.
No comments:
Post a Comment
You may leave your comments here