நம் காரியத்தை நாமே செய்து கொள்கிறதிலே கௌரவம் குறைச்சலே இல்லை. பிறத்தியாரிடம் இவற்றை விடுவதுதான் கௌரவம் குறைச்சல்.
ஸஹஜானந்த ஸம்பூர்ண ஸாகாராய நமோ நம:
வாக்குக் கட்டுப்பாட்டை வழக்கத்தில் கொண்டுவர வேண்டும். கணக்காகப் பேச வேண்டும். பிறருடைய மனதைப் புண்படுத்தாத பேச்சே பேச வேண்டும். தன் ஆத்மாவை உயர்திக் கொள்ள உதவுகிற விஷயங்களையே பேச வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மூலம், அகம்பாவத்தை விட்டுத் தொலைப்பது தான். அது தொலைந்தால் அடக்கத்தோடு, ஆனந்தத்தோடு எந்த காரியத்தையும் இறைவனுக்கு அர்பணிக்கும் புத்தியோடு செய்து நாமும் நலம் பெறலாம். உலகத்தையும் நலமாக வைத்திருக்கலாம்.
No comments:
Post a Comment
You may leave your comments here