மதங்கள் வேறுபட்டாலும் அருள் தரும் பரமாத்மா ஒனறுதான்
துவாதசாந்த மஹாபீட நிஷண்ணாய நமோ நம: ஓம்
ஒவ்வோரு மதத்திலும் சின்னங்களும், மூர்த்திகளும், சடங்குகளும் வேறுபடலாம். ஆனால், அருள் தரும் பரமாத்மா மாறவில்லை. எனவே எவரும் தங்கள் மதத்தைவிட்டுவிட்டு இன்னொரு மதத்திற்கு மாறவேண்டியதில்லை. இப்படி மதம் மாறுகிறவர்கள் தங்கள் பிறந்த மதத்தை மட்டுமின்றி சேருகிற மதத்தையும் குறைவு படுத்துகிறார்கள்.
நம் சொத்து என்ற நாம் நினைத்துக் கொண்டிருப்பதை நம் விருப்பப்படி விநியோகிக்க உரிமை பெற்றிருக்கிறோம் அல்லவா? அப்படியே இறைவனின் சொத்தாகிய நாமும் நம்மை அவன் இஷ்டப்படியே நடத்தட்டும் என்று விட்டு விட்டால், நமக்கு பாரமும் இல்லை. ஒரே ஆனந்தம் தான்.
No comments:
Post a Comment
You may leave your comments here