மனோதத்துவப்படி, நாம் எதை நினைத்துக் கொண்டே இருக்கிறோமோ, அதுவே ஆகிறோம்.
" தேஸகாலாபரிச்சின்ன த்ருக்ரூபாய நமோ நம: ஓம் "
தீபத்தில் ஒளி எப்படி வேறுபாடு பார்க்காமல் உயர்ந்தவன், தாழ்ந்தவன், புழு, பறவை, மரம் மற்ற நீர் வாழ்பிராணிகள், நிலம் வாழ்விலங்கினங்கள் இவற்றின் மீது படுகிறதோ, அப்படியே நம் மனத்திலிருந்து அன்பு ஒரு தீபமாக எல்லோரையும் தழுவுவதாகப் பிரகாசிக்க வேண்டும்.
தனக்கென்று எவ்வளவு செலவழிக்க முடியுமோ அப்படி எளிமையாக வாழ்ந்து மிச்சம் பிடித்து அதை தர்மத்துக்கு செலவழிப்பது தான் "தனக்கு மிஞ்சித் தர்மம்" என்பது.
ஒரு மனிதன், மிருகம், பறவை இவற்றை உண்பது உடன் பிறப்பை கொலை செய்வது தான். அசைவ உணவை ஆதரித்தால் "அனைத்துயிர் சகோதரத்வம்" என்பதற்கு அர்த்தமில்லாமல் போகிறது.
No comments:
Post a Comment
You may leave your comments here