Tuesday, October 5, 2010

தர்மங்களை எடுத்துச் சொல்வதை விட எடுத்துக் காட்டாக தாங்களே இருப்பதுதான் அதிக சக்திவாய்ந்தது


"ஓம் க்ஷேத்ரக்ஷேத்ரக்ஞ பரத்யேக திருஷ்டிதாய நமோ நம: "

நமது மதத்தில் தனி மனிதனுக்கும் பலவிதக் கட்டுப்பாடுகள், சமுகத்திற்கும் பலவிதக் கட்டுப்பாடுகள்.  
கட்டுப்பாடுகள் என்றால் கரைபோடுவது என்று  அர்த்தம்.  கரையில்லாமல் ஒரு ஏரி  இருக்க முடியுமா?
கட்டுப்படுத்தக்கூடாது என்று அப்படியே உடைந்து விட்டால்,  நீர் முழுதும் பாழாகி,  ஊரும் பாழாக வேண்டியது தான்.

"பழையது" என்பதற்காகவே அதுதான் உயர்த்தி என்று சொல்லவேயில்லை.  ஆனால் "பழையது" என்பதாலேயே அதை உதவாதது என்று ஒதுக்கி விடவும் கூடாது.  அதன் பயன் என்ன என்று தேர்ந்து பார்த்தே எடுத்துக் கொள்ள வேண்டும்.  

1 comment:

You may leave your comments here

Related Posts with Thumbnails