Wednesday, October 27, 2010

எக்காரணமும் வியாஐமும் இன்றி பிரியமாய் இருப்பதுதான் உண்மை அன்பு.

" ஓம் அபின்னாபின்னாத்மைக்ய விக்ஞான ப்ரபோதாய நமோ நம: "


உத்தமமான பொருளிடம் வைக்கும் அன்புக்கே பக்தி என்று பெயர்.  நமக்கு சமமானவர்களிடம் வறுக்கும் அன்பு, நட்பு உத்தமமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், வயதில் பெரியவர்களிடம்  வைக்கும் அன்பு - மரியாதை, சின்னவர்களிடம், நமக்கு கீழ்பட்டவர்களிடம் வைக்கும் அன்பு - அருள், கஷ்டப்ப்டுகிறவர்களிடம் வைக்கும் அன்பு - கருணை.


பாபிகளை நாம் வெறுப்பதிலும் அவர்களைக் கோபிப்பதிலும் பலனில்லை.  அவர்களுடைய மனங்களும் நல்ல வழியில் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பது ஒன்றே நாம் செய்ய வேண்டியது.


"அம்பாளுக்கு செய்கிற அலங்காரம்தான் நமக்கு அழகு.  நமக்கே செய்து கொள்கிற அலங்காரம், அகங்காரத்திற்குத்தான் வழிகாட்டும் "

No comments:

Post a Comment

You may leave your comments here

Related Posts with Thumbnails