Tuesday, October 5, 2010

பக்தி, கட்டுப்பாடு, தியாகம்


"ஓம் சனகாதிமஹாயோகிசத்ருஷாய நமோ நம: "



பத்தியம் இல்லாமல் மருந்து மட்டும் பலன் தராது.  உங்களுக்கெல்லாம் படிப்புதான் மருந்து என்றால் 
அதோடு சேர்த்திக் கொள்ள வேண்டிய பத்தியம் பணிவு என்பதே.


பள்ளியில் படித்து வெளிவந்தவர்கள் யோக்கியர்களாக இல்லாவிட்டால் பள்ளிக்கூடம் வைத்து பயன் நமக்கு ஏது?  பக்தி, கட்டுப்பாடு, தியாகம் முதலியவை இல்லாமல் படிப்பால் வெறும் புத்தியை மட்டும் வளர்த்துக் கொண்டால் சாதுரியமாக அயோக்கியத்தனங்கள் செய்து தப்பித்துக் கொள்வதற்குத்தான் வழியாகிறது.


தியானம் செய்வதே வாழ்க்கையின் முதலான காரியம் என்று கருத வேண்டும்.  உறுதியான சங்கல்ப்பம் 
இருந்தால் காலம் கிடைக்காமல் போகாது.  

No comments:

Post a Comment

You may leave your comments here

Related Posts with Thumbnails