உத்தமமான பொருளிடம் வைக்கும் அன்புக்கே பக்தி என்று பெயர். நமக்கு சமமானவர்களிடம் வறுக்கும் அன்பு, நட்பு உத்தமமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், வயதில் பெரியவர்களிடம் வைக்கும் அன்பு - மரியாதை, சின்னவர்களிடம், நமக்கு கீழ்பட்டவர்களிடம் வைக்கும் அன்பு - அருள், கஷ்டப்ப்டுகிறவர்களிடம் வைக்கும் அன்பு - கருணை.
பாபிகளை நாம் வெறுப்பதிலும் அவர்களைக் கோபிப்பதிலும் பலனில்லை. அவர்களுடைய மனங்களும் நல்ல வழியில் திரும்ப வேண்டும் என்று பிரார்த்திப்பது ஒன்றே நாம் செய்ய வேண்டியது.
"அம்பாளுக்கு செய்கிற அலங்காரம்தான் நமக்கு அழகு. நமக்கே செய்து கொள்கிற அலங்காரம், அகங்காரத்திற்குத்தான் வழிகாட்டும் "